(FASTNEWS | COLOMBO) – இந்தியா – காஷ்மீர் பிரச்சினையின் மற்றுமொரு திருப்பு முனையாக காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் சில இடங்களது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு மக்களுக்கு எல்லைக் கோடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று(18) இரவு நகர மக்களுக்கும் பொலிசாருக்கும் இடையே முறுகல் நிலை இடம்பெற்று வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமை முதல் இவ்வாறு முறுகல் நிலை ஏற்பட்ட வண்ணமிருந்த நிலையில் அது தற்போது உக்கிரமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.