இலங்கையின் தேசிய மிருகக்காட்சி சாலையிலிருந்து இரண்டு ஆண் மற்றும் பெண் பச்சை அனகோண்டாக்கள் இந்தியாவின் மைசூர் சமராஜேந்திர விலங்கியல் பூங்காவிற்குஅனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இரண்டு அனகோண்டாக்களும், 6 முதல் 8 அடி நீளமும், 15 கிலோ எடை கொண்டுள்ளன.
ஆறு ஆண்டுகளின் பின்னர் இந்த விலங்குப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.