இந்தியா – பாகிஸ்தான் உலக கிண்ண போட்டிகள் தொடர்பில் ஐ.சி.சி யின் தீர்மானம்..

(FASTNEWS-COLOMBO) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது எதிர்வரும் ஜூன் மாதம் 16 ஆம் திகதி, மென்செஸ்டரில் நடைபெறவதனை இரத்து செய்வதற்கு தகுந்த காரணங்கள் இல்லை என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

புல்வாமா தாக்குதலில் 40 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை இரத்து செய்ய வேண்டும் என தொடர்ச்சியாக பலர் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.