இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல்கள் இரண்டு (CGS Samar and Aryaman) இலங்கை வந்தடைந்துள்ளன.
இன்று முதல் எதிர்வரும் ஏழாம் திகதி இவை இலங்கையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்தக் கப்பல்கள்; காலி துறைமுகத்திற்கும் செல்லவிருக்கின்றன.
கடந்த 25ம் திகதி தொடக்கம் 29ம் திகதி வரை மாலைதீவில் கடல் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட கப்பல்களே இலங்கை வந்தடைந்துள்ளன.