இந்திய மீனவர்கள் 07 பேர் கைது

(FASTNEWS|COLOMBO ) – இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 07 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 36 வயதெல்லைக்குட்பட்ட மீனவர்களே என தெரிவிக்கப்படுகின்றன.

கைது செய்ப்பட்டுள்ள மீனவர்களை கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.