இந்திய வைத்தியர்களை நாட்டுக்கு அழைத்து வந்தாலும் வேலை நிறுத்தம் தொடரும்…

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள நிலையில், அதனை நிவர்த்தி செய்ய அரசு இந்திய வைத்தியர்களை நாட்டுக்கு அழைத்து வந்தாலும் அதற்கு தாம் ஒருபோதும் எதிர்ப்பினைத் தெரிவிப்பதில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

அரச வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் இந்திய வைத்தியர்கள் வரவழைக்கப்படுவது குறித்து நேற்று(03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த சங்கத்திடம் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைட்டம் பிரச்சினையினை முன்வைத்து நாளை(05) முன்னெடுக்கப்பட உள்ள வைத்தியர்களது வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)