இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை

(FASTNEWS|COLOMBO)- இந்தோனேசியாவின் வடகிழக்கில் உள்ள சுலவேசி தீவில் இன்று(08) 6.9 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சுலவேசி தீவுக் கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கும் ஏற்பட்டதாக இந்தோனேசிய புவி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.