இந்தோனேஷியாவில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

இந்தோனேசியாவின் லம்பாக் என்ற தீவின் அருகே இன்று(05) 7.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் இலங்கைக்கு இதன் அச்சுறுத்தல் இல்லை என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.