இந்த வருடத்தில் 25 ஆயிரம் கிலோகிராம் பீடி இலைகள் மீட்பு

(FASTNEWS|COLOMBO) – இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் வடக்கில் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட முற்றுகைகளில் 25 ஆயிரம் கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த இந்த பீடி இலைகளுடன் இதுவரையில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வடமத்திய கடற்படை நிறைவேற்று பிரிவின் கடற்படையினர் சிலர் மன்னார் தாழ்வுபாடு கரையோரத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 1006 கிலோகிராம் எடைக்கொண்ட பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.