இந்த வருடத்தில் 40,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்…

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 41 ஆயிரத்து 138 பேர் டெங்கு நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெங்கு நோயினால் 47 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புள்ளிவிரபங்களின் படி கொழும்பு மாவட்டத்திலே அதிக டெங்குஅச்சுறுத்தல் நிலவுகின்றதுடன், 7 ஆயிரத்து 942 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.

இதேவேளை, கம்பஹா, களுத்துறை, கண்டி குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோய் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது