இந்நாள் ஜனாதிபதி’க்கும் முன்னாள் ஜனாதிபதி’க்கும் இடையில், 02 முறை பேச்சுவார்த்தை…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில், தொலைபேசி மூலம், இரண்டு முறை பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் நாட்டின் நிலைமை தொடர்பில், இதன்போது பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நடந்து முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் பின்னர், நாட்டுக்குள் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பில், ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்றை ஏற்படுத்த, அமைச்சர்கள் பலர் முயற்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

#rishma