அத்தியாவசிய நாளாந்த தேவையை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் 4 நாட்களுக்கு போதுமான பெற்றோல் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக எரிபொருள் வளத்துறை அமைச்சின் செயலாளர் உபாளி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் குறைவின்றி எரிபொருள் விநியோக செயற்பாடுகள் இடம்பெறுகின்ற, இந்நிலையில், தேவைக்கு அதிகமாக பெற்றோலை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.
இதேவேளை, IOC நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் தரமற்றதாக காணப்படுவதாகவும், எந்த காரணத்திற்காகவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குறித்த பெற்றோல் விநியோகிக்கப்படமாட்டாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
E – (rizmira)