கொழும்பு – காலி முகத்திடல் பகுதியில் இன்றிரவு(31) விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2019ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, பெருந்திரளான மக்கள், காலி முகத்திடலுக்கு வருகைதருவர் எனவும், அதனை கருத்தில் கொண்டே குறித்த இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.