ரயில்வே தொழிற்சங்கங்கள் பல பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள போதிலும் இன்று(09), மாலை 08 ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, ரயில்வேயின் மேலதிக பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த ரயில்கள் நாளையும் (10), சேவையில் ஈடுபடும் என குறிப்பிட்டுள்ள அவர், அலுவலக நேரங்களில் இந்த சேவை இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.