(FASTNEWS | COLOMBO) – அரச பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று(13) ஆரம்பமான நிலையில் சகல பாடசாலைகளினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் , இன்றைய தினம் பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைந்த அளவிலேயே காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தரம் 6 முதல் 13ம் தரம் வரையிலான மாணவர்களுக்கு கடந்த 6ம் திகதி பாடசாலை 2ம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் , குறித்த காலப்பகுதியிலும் மாணவர்களின் வருகை குறைந்தளவிலேயே காணப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.