நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
மட்டக்களப்பு, பதுளை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.