மேல், சபரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று(04) மாலை 2 மணிக்கு பின்னர் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சபரகமுவ மாகாணம் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 75 மில்லி மீட்டர் வரையிலான கடும் மழை பெய்யக் கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை கரையோரப் பகுதிகளில் காலை பொழுது மழை பொழிய கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.