(FASTNEWS-COLOMBO) கொள்ளுபிட்டி சந்திக்கு அருகில் உள்ள வர்த்தக நிலைய தொகுதியொன்றில் இன்று(08) அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
வெடிப்பின் பின்னர் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 11 வர்த்தக நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சமையல் எரிவாயு கொள்கலன் வெடித்து இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கிறது.