இன்று இடம்பெற்ற புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு…

யாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் புகையிரதத்தில் மோதி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இளைஞர்களே இவ்வாறு புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.

இளைஞர்களின் சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டே இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்.தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.