இன்று இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர்…

ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை, நீதி, நட்டஈடு வழங்கல் உறுதிப்படுத்துவதற்கான விசேட அறிக்கையாளர், பப்லோ டி கிரீப் இன்று(10) இலங்கை விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறை மற்றும் அதுதொடர்பிலான அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வடக்கு கிழக்கு, மலையகம் மற்றும் தென்பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு, பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.