இன்று காலை தனியார் பேருந்து ஒன்றில் தீ பரவல்

(FASTNEWS|COLOMBO) – அவிசாவளை – உக்வத்த பிரதேசத்தில் இன்று(25) காலை தனியார் பேருந்து ஒன்றில் தீ பரவியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்திலே இவ்வாறு தீ பரவியுள்ளதுடன், குறித்த இந்த தீ பரவலில் எவருக்கும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

பேருந்தில் ஏற்பட்டுள்ள மின் கசிவே தீ பரவலுக்கு காரணம் எனவும் அவிசாவளை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.