இன்று நடைபெற இருந்த அமைச்சரவை மாற்றம் ஒத்திவைப்பு…

அமைச்சரவையில் இன்று(19) நடைபெற இருந்த மறுசீரமைப்பு குறித்த நடவடிக்கைகள் எதிர்வரும் 22ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அமைச்சரவையில் விரைவாக மாற்றம் ஏற்படுத்த உள்ளதாக அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் இரு வாரங்கள் அமேரிக்கா சுற்றுப் பயணத்தில் பங்கேற்கவுள்ளதால் எதிர்வரும் திங்கள் அன்று அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)