பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது… (UPDATE)

தமது கோரிக்கைகளுக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளமை காரணமாக இன்று(09)  நண்பகல் மேற்கொள்ளவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக புகையிரத ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது

 

———————————————(UPDATE)

இன்று நண்பகல் முதல் புகையிரத ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு..

இன்று(09) நண்பகல் முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக புகையிரத ஊழியர்களின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று(08) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவிருந்த புகையிரத தொழிற்சங்க ஊழியர்கள் சங்கம் தமது போராட்டத்தை ஒத்திவைப்பதாக தீர்மானித்தனர்.

இந்நிலையில், இன்று(09) நண்பகல் முதல் அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.