இன்று நள்ளிரவு முதல் அரிசியின் விலை குறைப்பு..

நாட்டில் நிலவும் அரிசியின் அசாதாரண விலை உயர்வு காரணமாக மக்களுக்கு சாதாரண விலையில் அரிசியை நாடெங்கும் சில்லறையாகவும் மொத்தமாகவும் விநியோகிக்க சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

நுகர்வோர் நன்மை கருதி இன்று(19) நள்ளிரவு முதல் மீண்டும் அரிசியின் விலை குறைக்கப்படுவதாக சதொச நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி.தென்னக்கோண் தெரிவித்துள்ளார்.

சதொச தலைமையகத்தில் இன்று(19) இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்படி, வெள்ளை அரிசி 1Kg–65/=, நாட்டு அரிசி 1Kg–73/=, உடைந்த அரிசி 1Kg-60/=, சம்பா 1Kg-80/= விற்கப்படவுள்ளது.

 

(rizmira)