இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு…

புகையிரத சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் புகையிரத அதிபர்களும் இணைந்து இன்று(30) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாடுகள் தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை அமுல்படுத்துவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக புகையிரத சங்கங்கள் தெரிவித்துள்ளன.