கட்சித்தலைவர்களின் கூட்டம் இன்று(17) நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் காலை 11.30 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த வாரம் முதல் பாராளுமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளது.
பாராளுமன்ற அமர்வு முடிவடைந்த காரணத்தால் செயலிழந்த செயற்குழுவை மீண்டும் நியமிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.