நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இன்று (21)இடம்பெறவுள்ளது.
கடந்த வாரம் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது.
இதேவேளை, இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.