இன்று மழையுடன் கூடிய காலநிலை…

இன்றைய தினம் சில பிரதேசங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சபரகமுவ, ஊவா, மத்திய மாகாணங்கள் களுத்துறை காலி மாத்தறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஹம்பாந்தொட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இடைக்கிடை மணித்தியலாத்திற்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீச கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டின் தென்மேற்கு பிரதேசங்களில் தற்போது நிலவும் காலநிலையில் நாளைய தினம் மாற்றங்கள் காணப்பட கூடும் என அத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.