இன்று மஹிந்தவை சந்திக்கின்றது விசேட குழு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடையே இணக்கத்தை ஏற்படுத்தவென அமைக்கப்பட்ட விசேட குழு இன்று வியாழக்கிழமை (25) மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நியமித்துள்ள இக்குழுவில்  6 பேர் அடங்குகின்றனர்.

முதலில் இக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேசப்பட்ட விடயங்களை இன்று முன்னாள் ஜனாதிபதிக்கு எடுத்துரைக்க இவ்விசேட குழு தீர்மானித்துள்ளதாக குழுவின் உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.