பண்டிகைகாலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று(15) முதல் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவர் என்று பொலிஸ் தலைமைக் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பண்டிகைகாலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி போக்குவரத்து ஏற்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் உள்ள பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி பொலிஸ் மா அதிபர் அறிவுரை வழங்கியுள்ளார் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.