இன்று(28) முதல் எதிர்வரும் செப்டம்பர் 07 ஆம் திகதி வரை இலங்கைக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோண்டாவில் மற்றும் நாவற்காடு போன்ற பகுதிகளுக்கு இன்று மதியம் 12.00 மணியளவில் சூரியன் உச்சம் கொடுப்பதாக வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டது.
இதேவேளை ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.