இன்று முதல் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் மீறினால் கடுமையான சட்டம் அமுல்…

எதிர்வரும் 10ம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் நேற்று(07) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது.

எந்தவொரு தேர்தல்கள் பிரச்சார நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாதென்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

மேலும், வாக்காளர்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் எந்தவொரு நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும், குறித்த நபர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமுல்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.