இன்று(01) முதல் நாடளாவிய ரீதியில் விஷேட சோதனை நடவடிக்கை…

சட்டவிரோத துப்பாக்கிகளை கைப்பற்றுவதற்காக நாடளாவிய ரீதியில் விஷேட சோதனை நடவடிக்கை ஒன்று இன்று(01) முதல் மூன்று மாதங்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.