இன்று மேலும் 214 பேருக்கு கொரோனா உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 214 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த 214 பேரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 16,405 ஆக அதிகரித்துள்ளது.