சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமது வீடுகளுக்குச் செல்லக் காத்திருப்பவர்களின் நலன் கருதி இன்றும் (12) விசேட போக்குவரத்து சேவையை வழங்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக சபையின் பிரதி நிறைவேற்று அதிகாரி ராஜா குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று விசேட ரயில் சேவையும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ரயில் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். மருதானை முதல் காலி விரையில் விசேட ரயில் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாளையும், நாளை மறுதினமும் விசேட ரயில் சேவையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.