இன்று 12 மணி நேர நீர் விநியோகத்தடை ..

கொழும்பு கொட்டாஞ்சேனை, மட்டக்குளி, கிரான்ட்பாஸ் மற்றும் தொட்டலங்க பகுதிகளில் 12 மணி நேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று(15) பிற்பகல் 2 மணி தொடக்கம் நாளை(16) அதிகாலை 2 மணி வரை குறித்த இந்த தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

​நீர்விநியோகத் தடை தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு 1939 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

 

(rizmira)