பியகம பிரதேசத்தின் பல பகுதிகளில் இன்று(31) காலை 9 மணிமுதல் இரவு 12 வரை 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
எல்பொட, மல்வானை, தொம்பே, பியகம வடக்கு, கந்துகொட ஆகிய பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.