இன்று 16 மணித்தியால நீர்வெட்டு அமுலுக்கு..

நீர்­கொ­ழும்பு மாந­கர சபைக்கு உட்பட்ட பகுதியில் இன்று(02) 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

குறித்த இந்த நீர்வெட்டு இன்று(02) மு.ப.11.00 மணி முதல் நாளை(03) அதி­காலை 3.00 மணி வரை­யி­லான காலப் பகுதியில் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, தூவ­பி­டி­பன பகுதி, கட்­டு­நா­யக்க விமானப் படைத்­தளம், கட்­டு­நா­யக்க ஏற்­று­மதி முத­லீட்ட வலயம், கட்­டு­நா­யக்க விமான நிலையம் ஆகிய பகு­தி­களில் இந்­நீர்­வெட்டு அமுலில் இருக்கும் எனவும் குறித்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

(rizmira)