(FASTNEWS|COLOMBO) ராஜகிரிய ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்துகளுக்காக புதிய வாகன போக்குவரத்து திட்டமொன்றை செயற்படுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி , இன்று(02) முதல் பாராளுமன்ற வீதியின் ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்துகள் , மேம்பாலத்திற்கு கீழ் வெலிகடை சந்தியில் கொடா வீதியின் ஊடாக ஆயுர்வேத சந்தி வரை பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.