நிலவும் காலநிலையில், நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை இன்று(23) முதல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக இன்று(23) இரவு முதல் மழை அதிகரிக்கும் எனவும் மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
###