இன்றைய காலநிலை…

நாட்டை சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் பகுதியினில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக மழை காலநிலை மேலும் அதிகரிக்க கூடும் என காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைய தென், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று(05) கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் எனவும் காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.