ஒன்றிணைந்த எதிரணியினால் முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணியின் போது, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டால் ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் என்ற வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 11 பேரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக கடந்த (03)ம் திகதி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கருவாத்தோட்டை பொலிசாருக்கு நீதிமன்றம் வழங்கிய அறிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் 11 பேரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதில், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, திலும் அமுனுகம, ரோஹித அபேகுணவர்தன, பிரசன்ன ரணதுங்க, தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, குணசேகர, அசங்க நவரத்ன ஆகியோரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.