இன்றைய(23) போட்டிக்கு எவ்வித திட்டமும் இல்லை, எதிர்வரும் திட்டம் குறித்து திக்வெல்ல கருத்து…

சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் இன்று(23) இடம்பெறும் ஐந்தாவதும் இறுதியுமான போட்டி தொடரில் பாரிய திட்டங்கள் எதுவும் இல்லை என்றும், தமது அணியின் பிரதான இலக்கு எதிர்வரும் உலகக் கிண்ண தொடர் என்றும் இலங்கை அணியின் வீரர் நிரோஷன் திக்வெல்ல போட்டிக்கு முன்பதான நேற்றைய(22) ஊடக சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

“நாம் பல்லேகலயில் விளையாடிய இறுதிப் போட்டியில் இதற்கு முன்னதான போட்டிகளை விடவும் சிறப்பாக விளையாடினோம். போட்டிகளில் எமது ஆரம்ப மற்றும் இடை துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டத்தில் முன்னேற்றம் இருந்தது.. பிழைகளை சரி செய்து உலகக் கிண்ணத்திற்கு தயாராக உள்ளோம் உலகக் கிண்ண போட்டிக்காக எமக்கு இன்னும் 10 ஒருநாள் போட்டிகளே எஞ்சியுள்ளது. அதனை எமக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்.. ”