(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மொரட்டுவ – அங்குலானையில் உள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் இன்று(22) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர 15 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தீப்பரவலுக்கான காரணம் மற்றும் சேதவிபரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் மொரடுவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.