இரண்டாம் தவணை கல்விச் செயற்பாடுகள் ஆரம்பமாகும் வரை சமய பாடசாலைகளை நடத்த வேண்டாம் என கோரிக்கை…

(FASTNEWS COLOMBO) – நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு இரண்டாம் தவணை கல்விச் செயற்பாடுகள் ஆரம்பமாகும் வரை தஹம் பாடசாலைகளை நடத்த வேண்டாம் என விகாரைகளுக்கு அறிவித்துள்ளதாக பௌத்த மத விவகாரங்கள் ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும், முஸ்லிம் மாணவர்களுக்கான அஹதியா பாடசாலைகளும் இடம்பெற மாட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.