இரண்டாயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று (03) வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 2770 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 2651 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 24 முறைப்பாடுகளும் மற்றும் 95 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேற்று (03) பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 98 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.