வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்கவிருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக தமன்னா ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ஆக்ஷன், காமெடி, குடும்ப செண்டிமெண்டுடன் கூடிய கமர்சியல் படமாக உருவாக இருக்கும் இந்த படம் விஷால்-சுந்தர்.சி இணையும் 3 வது படம். இதில் விஷாலுக்கு ஜோடிகளாக தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி இருவரும் நடிக்கிறார்கள்.
விஷாலுக்கு வில்லனாக ஜெகபதி பாபு நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழு விரைவில் வெளியிட இருக்கிறது.