ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படம் ஒன்று உலக புகழ்பெற்ற National Geographic ஊடக நிறுவனத்தின் நெட் ஜியோ என்ற Instagram வலைத்தளத்தின் புகைப்படமாக தெரிவு செய்யப்பட்டிருந்தன.
சமீபத்தில் இடம்பெற்ற Scout Jamboreeயில் ஜனாதிபதி மைத்திரி கலந்து கொண்ட சந்தர்ப்பத்தில் பங்களாதேஷில் இருந்து கலந்து கொண்ட சஞ்சிதா என்ற சாரணர் மாணவியுடன் எடுத்துகொண்ட செல்பி புகைப்படமே நெட் ஜியோ என்ற Instagram வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.
நெட் ஜியோ என்ற Instagram வலைத்தளத்தில் உலகம் முழுவதும் 45 மில்லியன் மக்கள் இணைந்துள்ளதோடு இதுவரையில் அவ்வாறான 10 ஆயிரத்திற்கும் அதிகமான புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யட்டுள்ளன.
எப்படியிருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படம் பதவேற்றம் செய்யப்பட்டு இரண்டு மணித்தியாலத்திற்கு 67 ஆயிரம் விருப்பங்கள் (Likes) மற்றும் 375 விமர்சனங்கள் (Comments) பதிவாகியுள்ளது.