நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்திற்கு விடுவிக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம மற்றும் கிரிஎல்ல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்மேடு சரிதல், மற்றும் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் தென்படும் பட்சத்தில், உடனடியாக அந்த பகுதியிலிருந்து வௌியேறுமாறு இடர்முகாமைத்துவ நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.