இராஜங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகனுக்கு பிணை…

இராஜங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட நான்கு பேர் தலா 02 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் நேற்று(19) விடுதலை செய்யப்பட்டனர்.

இவ்வழக்கு மீண்டும் அக்டோபர் 03 ம் திகதி வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

100 மில்லியன் ரூபா பெறுமதியான நிர்மானப் பணிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கடத்தியமை தொடர்பாக, வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.